Saturday 27 July 2013

போக்குவரத்து தொழிலாளர்களின் அவலநிலை



தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை போக்குவரத்து கோட்டங்கள் உள்ளன. இந்த கோட்டங்களில் 20 ஆயிரத்து 500 பஸ்கள் உள்ளன. ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் உள்ளனர். போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மாநிலம் முழுவதும் 46 ஆயிரம் பேர் உள்ளனர்.

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஓய்வு பெற்றால், ஓய்வு பெறும் நாளில் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுமுறை சம்பளம் போன்றவற்றிற்கான காசோலையை கையில் வழங்கி, மாலை, மாரியாதை செய்து வீட்டில் கொண்டு போய் விடுவது வழக்கம். அந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது ஓய்வு பெற்றால் சால்வை போட்டு கைகுலுக்குவதோடு சரி. கூடுதலாக அரை கிலோ இனிப்பு, அரை கிலோ காரம், 3 பாத்திரங்கள் (சம்பளம்) வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். அதிலும் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு அந்த மரியாதையும் இல்லை. வெள்ளை பேப்பரில் ‘நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள்‘ என்று எழுதி தருவதோடு சரி.
பணிக்கொடை, விடுமுறை சம்பளம், வருங்கால வைப்பு நிதி பற்றி எதுவும் தெரியாமலேயே தொழிலாளி வீட்டிற்கு போகிறார். ஓய்வுக்கு பிறகு நிம்மதியாக வீட்டில் குடும்பத்துடன் பொழுதை கழிக்க வேண்டிய அவருக்கு அதன் பிறகு தான் வேலையே ஆரம்பிக்கிறது. தனக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடை, பென்சன், விடுமுறை சம்பளத்திற்கு போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு தினமும் படியேறுகிறார். தள்ளாத வயதில் நடையாய் நடந்து ஒவ்வொரு அதிகாரிகளாக சந்தித்து குமுறலை கொட்டுகின்றனர். இருப்பினும் அவர்களின் கோரிக்கை, கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது.

பணிக்கொடை பணம் (கிராஜூவிட்டி) ஓய்வு பெற்ற 30 நாட்களுக்குள் தொழிலாளிக்கு வழங்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. 2011 மே மாதம்