Thursday 22 August 2019

Tnstc

அரசாணை வெளியீடு

அரசு போக்குவரத்து கழகங்களில், ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை, ஓய்வுபெற்ற, ஓய்வூதியர்களுக்கு, பல்வேறு பணப் பலன்கள் வழங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், விடுப்பு சம்பளம், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப் பலன்களை வழங்கும் வகையில், போக்குவரத்து கழகங்கள் வாரியாக, ரூ. 1,093 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.125.55 கோடி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத் துக்கு ரூ.63.38 கோடி, அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் - ரூ.130.26 கோடி, சேலம் - ரூ.123.63 கோடி, கோவை - ரூ.164,79 கோடி, கும்பகோணம்- ரூ.219.80 கோடி, மதுரை- ரூ.165.66 கோடி, நெல்லை - ரூ.99.93 கோடி என ரூ.1093 கோடி பிரித்து அளிக்கப்படுகிறது.

இதில், ஈட்டிய விடுப்புக்காக ரூ.133 கோடியே 25 லட்சம், பணிக்கொடை- ரூ.457 கோடி, வருங்கால வைப்பு நிதி- ரூ.282 கோடியே 97 லட்சம், ஓய்வூதியத்தை தொகுத்து பெறுதல் ரூ.207 கோடியே 8 லட்சம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரூ.12 கோடியே 70 லட்சம் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
கதிகலங்கி நிற்கும் ஆட்டோமொபைல் துறை சரிவுக்கான முக்கிய காரணங்கள் இதுதான்..!
இந்த தொகையை ஓய்வு பெற்றவர் களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். வேறு எந்த பயன் பாட்டுக்கும் திருப்பிவிடக்கூடாது. இதில் ஏதேனும் மீறல்கள் இருந்தால் அவை தீவிரமாக கருத்தில் கொள்ளப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment