Wednesday 16 October 2019

ஒப்பந்த பேச்சு வார்த்தை

சென்னையில் இன்று 16/10/19 Spl ACL பேச்சு வார்த்தை துவங்கும் போதே வேலை நிறுத்த அறிவிப்பு கொடுக்காத சில சங்கங்கள் வந்திருந்ததை "அவர்கள் எவ்வாறு அழைக்கப் பட்டனர்" என கூட்டமைப்பு சங்கங்கள் ஆட்சேபணை கிளப்பியவுடன் அவர்கள் வெளியேற்றப் பட்டனர்

*வேலை நிறுத்தத்தின் போது 86 பேர் மீது பொய் வழக்கு போட்டு சஸ்பெண்ட் செய்து பின்னர் மீளப் பணி கொடுத்த போதிலும், அவர்களில் பலர் ஊர் மாற்றங்கள் ரத்து செய்யப்படவில்லை என்றதும் அவரவர் பழைய கிளைக்கு உடனடியாக மாற்ற உத்திரவிடப்பட்டது*

*சுமார் 5600 RC /RD /De பணிநிரந்தரம் செய்யப்படவில்லை என்றதற்கு 04/11/19ற்குள் இதற்கான தீர்வு கண்டு பட்டியலுடன் வர உத்திரவிடப்பட்டது*

*அடுத்த இறுதி வாய்தா 04/11/19 அன்று கண்டிப்பாக நிர்வாக இயக்குனர்கள் ஆஜராக உத்திரவிடப்பட்டது*

*ஒப்பந்தப்படி பேட்டா மாற்றாத கழகங்கள் உடனடியாக அதை அமுல் படுத்த உத்திரவிடப் பட்டது*

*பழிவாங்கும் அனைத்து ஊர்மாற்றங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது*

*ஒப்பந்த சரத்திற்கு விரோதமாக போடப்பட்ட அரசாணைகள் GO 41 மற்றும் GO 73 செயல்படுத்தக் கூடாது என உத்திரவிடப்பட்டது*

*பணிச்சுமை, அதிகமான வேலை நேரம் பணிபுரிய நிர்பந்திப்பது குறித்து அழுத்தமாக வாதிடப்பட்டது*

*04/11 வாய்தாவிற்கு MDதான் வர வேண்டும். சொல்லப்பட்ட அனைத்து பிரச்சனைகள் தீர்வு சம்மந்தமான அறிக்கை ஆவணங்களுடன் வர வேண்டுமென உத்திரவிடப்பட்டது*

*வேலை நிறுத்தத்தின் போது பழி வாங்கப்பட்ட 86 பேர்களில் பலர் ஓய்வு பெற்று அவர்கள் பணிமுடிவு தீர்வுகள் நிலுவையில் வைக்கப் பட்டுள்ளது தவறு. ஓய்வு பெற்றபின் நடவடிக்கை தொடரக் கூடாது. அவர்களின் settlement உடனே தீர்வு செய்யப்பட வேண்டுமென உத்திரவிடப்பட்டது*

No comments:

Post a Comment