Saturday, 18 August 2012
Sunday, 12 August 2012
அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம்
போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகள்: அனைத்துத் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!
சென்னை, ஆக.10-
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொழிலாளர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. அரசும், நிர்வாகமும் தலையிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட் டங்கள் நடைபெறும் என அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுப் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) துணைத்தலைவர் எம்.சந்திரன் தலைமையில் 10ம் தேதி பல்லவன் சாலையில் (கலையரங்க வளாகத்தில்) அமைந்துள்ள சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்று சுமார் 15 மாதங்கள் ஆகியும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து, தொழிற்சங்கங்கள் அரசிடம் தனித் தனியாக மனு கொடுத்து நேரில் சந்தித்துபேசியும் இதுநாள் வரை தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. முதலமைச்சர் சட்ட மன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளைக்கூட அமலாக்குவதில் காலதாமதம் நீடிக்கிறது. ரிசர்வ்
Thursday, 9 August 2012
போக்குவரத்து கழகங்களில் நட்டமா?ஏன்?எப்படி?
பொதுப்போக்குவரத்தை ஒழித்துவிட்டு தனியார் முதலாளிகளை ஊக்குவிக்கும் அரசின் நடைமுறையால் மக்கள் இழப்பது என்ன?மறுமொழிகள்
தனியார்மயமும் தாராளமயமும் மக்களை நாட்டின் குறுக்கும் நெடுக்கும் வீசியெறிந்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் போக்குவரத்துக்கு பெருமளவு பேருந்தைத்தான் நாட வேண்டியிருக்கிறது.
கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே தொடர்வண்டியில் இடம் நிச்சயம். மேலும், வேண்டிய நேரத்தில் கிடைக்கின்றன, கொண்டு செல்கின்றன என்ற காரணங்களாலும் பேருந்துகளே மக்களுக்கு பெருமளவு கை கொடுக்கின்றன. இதில் அரசுப் பேருந்துகள் அதிகரிக்கப்படாமல் அதே எண்ணிக்கையிலிருந்தாலும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அரசுப்பேருந்துகள் தனியார் பேருந்துகளைவிட சொகுசாகவும், வசதியாகவும், முக்கியமாக சரியான நேரத்துக்குக் சென்றுவிடும்படியாகவும் இருக்கின்றன என்பதே பெருமளவு சொல்லப்படுகின்ற காரணங்களாக இருக்கின்றது. இதில் உண்மை இல்லாமல் இல்லை.
Wednesday, 8 August 2012
போக்குவரத்துக் கழகத்தில் பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம்
பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம்: கேலிக்கூத்தாகும் முதல்வரின் அறிவிப்பு!
சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம்!
சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம்!
பணம் கொடுத்தால்தான் பணி நிரந்தரம் என்ற நிலையால் முதலமைச்சரின் அறிவிப்பு போக்குவரத்துக் கழகத்தில் கேலிக்கூத்தாக்கப்படுகிறது. இத்தகைய ஊழல் நடவடிக்கைகளுக்கு சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 1986ம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக் கழகங்களில் பணிக்கு சேரும் தொழிலாளர்கள், ஓராண்டில் 240 நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்தால் பணி நிரந்தரம்
Wednesday, 1 August 2012
போக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள்
போக்குவரத்து தொழிலாளி மாத இதழ்கள் சனவரி 2012லிருந்து ஏப்ரல் 2012 வரை இந்த இணைப்பிருந்து பதிவிறக்கம் செய்து படிக்கலாம்
இப்பொழுது
Saturday, 5 May 2012
Speed Breakers on Roads
தமிழக உள்ளூர் சாலைகளில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்படும் வேகத்தடைகள், விதிகளுக்கு புறம்பாக அமைக்கப் படுவதால், விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.
உள்ளூர் சாலைகளில் விபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக, தேவையான இடங்களில் வேகத்தடைகள் ஏற்படுத்தப் படுகின்றன. பள்ளிகள், சாலை குறுக்கீடுகள், குடியிருப்புப் பகுதி சாலைகளிலும், இவை அமைக்கப் பட்டு உள்ளன.
என்ன சொல்கிறது விதி?இந்தியா முழுமைக்குமான, வேகத்தடை குறித்த கட்டுப்பாடுகளை, "தி இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ்' என்ற அமைப்பு முடிவு செய்கிறது. இதிலுள்ள, "போக்குவரத்து பொறியாளர்கள் குழு' கூடி, விதிமுறைகளை வரையறுக்கின்றனர்.
பிப்., 1986ம் ஆண்டு, போபாலில் கூடிய இந்த குழு, வேகத்தடை அமைப்பது
குறித்த விதிகளை வெளியிட்டது. அதில் உள்ள தகவல்:
* நகரப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் தெருக்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, வேகத்தடைகள் அமைக்க வேண்டும். ஓட்டுனர்களின் கவனத்துக்கு தெரியும்படி, இதற்கான எச்சரிக்கை அறிவிப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
* சாதாரண வாகன போக்குவரத்துள்ள சாலைகளில், வேகத்தை மணிக்கு 25 கி.மீ., அளவுக்கு குறைக்க, 3.7 மீ., நீளத்துக்கு, 10 செ.மீ., உயரத்துக்கு வேகத்தடை அமைக்கப்பட வேண்டும்.
* டிரக்குகள், பேருந்துகள், பெரிய "வீல் பேஸ்' கொண்டிருப்பதால், வேகத் தடைகளை கடப்பது சிரமம் என உணரப்பட்டு, 1.5 மீ., கொண்ட நீளமான தடைகள் அமைக்க பரிந்துரைக்கப் பட்டது.
* சில இடங்களில், வாகன வேகத்தை முழுவதுமாக குறைக்கும் நோக்கில், 100 மீ., அல்லது 120 மீ., பகுதிக்குள், குறிப்பிட்ட இடைவெளியில் நான்கு வேகத்தடைகளும் அமைக்கலாம்.
* "டி' அமைப்பில் இணையும் சாலைகள், ரயில் பாதைகள் குறுக்கே வரும் இடங்களில், வளைவான சாலைகளில், வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; பாலங்களில் வேகத்தடைகள் அமைக்கக் கூடாது.
காற்றில் பறக்கும் விதிகள்:ஆனால், இந்த விதிகள் பெரும்பாலும் பின்பற்றப் படுவதில்லை. சாலைகளில் எந்த இடத்திலும், விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள உயரத்தில் வேகத்தடைகள் அமைப்பதில்லை. சில இடங்களில், ஒரு அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.அதேபோல், உள்ளூர் நெடுஞ்சாலைகளில் மட்டுமே, வேகத்தடை மற்றும் தொடர் உயரத்தடை அமைத்து உள்ளதற்கான எச்சரிக்கை பலகைகள், ஆங்காங்கே வைக்கப் பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் எச்சரிக்கை பலகையோ, சாலைகளில் ஒளிரும் அமைப்போ, எதுவும் இருப்பதில்லை.
எச்சரிக்கை அமைப்பு: வேகத்தடைகள் அமைத்துள்ளதை, வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில், முதல் வேகத்தடை அமைந்துள்ள இடத்துக்கு, 40 மீ., முன்பாக, அதற்குரிய எச்சரிக்கை பலகை இருக்க வேண்டும்.வேகத்தடைகள் மீது கறுப்பு, வெள்ளை பூச்சு இருக்க வேண்டும். இரவு நேரத்தில் தெளிவாக தெரியும்படி, ஒளிரும் பூச்சு மற்றும் தேவையான ஒளிரும் சாதனமான, "கேட்ஸ் ஐ' அமைப்புகளும், அதில் தேவை. அதேசமயம், வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம், அவை அமைய வேண்டும்.
Thanks to Dinamalar 5.5.12
உள்ளூர் சாலைகளில் விபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக, தேவையான இடங்களில் வேகத்தடைகள் ஏற்படுத்தப் படுகின்றன. பள்ளிகள், சாலை குறுக்கீடுகள், குடியிருப்புப் பகுதி சாலைகளிலும், இவை அமைக்கப் பட்டு உள்ளன.
என்ன சொல்கிறது விதி?இந்தியா முழுமைக்குமான, வேகத்தடை குறித்த கட்டுப்பாடுகளை, "தி இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ்' என்ற அமைப்பு முடிவு செய்கிறது. இதிலுள்ள, "போக்குவரத்து பொறியாளர்கள் குழு' கூடி, விதிமுறைகளை வரையறுக்கின்றனர்.
பிப்., 1986ம் ஆண்டு, போபாலில் கூடிய இந்த குழு, வேகத்தடை அமைப்பது
குறித்த விதிகளை வெளியிட்டது. அதில் உள்ள தகவல்:
* நகரப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் தெருக்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, வேகத்தடைகள் அமைக்க வேண்டும். ஓட்டுனர்களின் கவனத்துக்கு தெரியும்படி, இதற்கான எச்சரிக்கை அறிவிப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
* சாதாரண வாகன போக்குவரத்துள்ள சாலைகளில், வேகத்தை மணிக்கு 25 கி.மீ., அளவுக்கு குறைக்க, 3.7 மீ., நீளத்துக்கு, 10 செ.மீ., உயரத்துக்கு வேகத்தடை அமைக்கப்பட வேண்டும்.
* டிரக்குகள், பேருந்துகள், பெரிய "வீல் பேஸ்' கொண்டிருப்பதால், வேகத் தடைகளை கடப்பது சிரமம் என உணரப்பட்டு, 1.5 மீ., கொண்ட நீளமான தடைகள் அமைக்க பரிந்துரைக்கப் பட்டது.
* சில இடங்களில், வாகன வேகத்தை முழுவதுமாக குறைக்கும் நோக்கில், 100 மீ., அல்லது 120 மீ., பகுதிக்குள், குறிப்பிட்ட இடைவெளியில் நான்கு வேகத்தடைகளும் அமைக்கலாம்.
* "டி' அமைப்பில் இணையும் சாலைகள், ரயில் பாதைகள் குறுக்கே வரும் இடங்களில், வளைவான சாலைகளில், வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; பாலங்களில் வேகத்தடைகள் அமைக்கக் கூடாது.
காற்றில் பறக்கும் விதிகள்:ஆனால், இந்த விதிகள் பெரும்பாலும் பின்பற்றப் படுவதில்லை. சாலைகளில் எந்த இடத்திலும், விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள உயரத்தில் வேகத்தடைகள் அமைப்பதில்லை. சில இடங்களில், ஒரு அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.அதேபோல், உள்ளூர் நெடுஞ்சாலைகளில் மட்டுமே, வேகத்தடை மற்றும் தொடர் உயரத்தடை அமைத்து உள்ளதற்கான எச்சரிக்கை பலகைகள், ஆங்காங்கே வைக்கப் பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் எச்சரிக்கை பலகையோ, சாலைகளில் ஒளிரும் அமைப்போ, எதுவும் இருப்பதில்லை.
எச்சரிக்கை அமைப்பு: வேகத்தடைகள் அமைத்துள்ளதை, வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில், முதல் வேகத்தடை அமைந்துள்ள இடத்துக்கு, 40 மீ., முன்பாக, அதற்குரிய எச்சரிக்கை பலகை இருக்க வேண்டும்.வேகத்தடைகள் மீது கறுப்பு, வெள்ளை பூச்சு இருக்க வேண்டும். இரவு நேரத்தில் தெளிவாக தெரியும்படி, ஒளிரும் பூச்சு மற்றும் தேவையான ஒளிரும் சாதனமான, "கேட்ஸ் ஐ' அமைப்புகளும், அதில் தேவை. அதேசமயம், வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம், அவை அமைய வேண்டும்.
Thanks to Dinamalar 5.5.12
Subscribe to:
Posts (Atom)
