Sunday, 20 January 2013

அரசுப்போக்குவரத்து


* வஞ்சிக்கப்படும் ‘ரிசர்வ்’ தொழிலாளர்கள் * தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம் * சீரழிக்கப்படும் அரசுப்போக்குவரத்து
கோரிக்கைகள் தீரும்வரை உண்ணாவிரதம்

ஜன.23 அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம் துவங்குகிறது
சென்னை, ஜன. 20-அரசுப் போக்குவரத்துத் தொழி லாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் வரை, ஜனவரி 23ம்தேதிமுதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெறும் என தமிழ்நாடு அரசுப் போக் குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சம்மேளனத் தின் பொதுச் செயலாளர் ஏ.பி.அன் பழகன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:16.5.2011 அன்று அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு கழித்து புதிய பேருந்துகள் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கியது. 9.5.2012 அன்று தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வரால் போக்குவரத்துக் கழகங்கள் சம்பந்தமாக சில அறிவிப்புகள்

டீசல் விலை உயர்வு


தனியாருக்கு 55 பைசா அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 11.91 பைசாவா?

மைய அரசு டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.டீசல் விலை உயர்வு கடுமையான விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுப்பதாகும்.
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 11.91 பைசா டீசல் விலை உயர்த்தி இருப்பது அரசு போக்குவரத்து கழகங்களை திட்டமிட்டு சீரழிக்கும் செயலாகும். பேருந்து கட்டண உயர்விர்க்கு பிறகும் போதிய வருவாய் இல்லாமல் கழகங்கள் பற்றாகுறையில் தள்ளாடி வருகின்றன.பழைய பேருந்துகளை மாற்றி பதிய பேருந்துகளை வாங்க இயலாமலும்,பேருந்துகளுக்கு அவசியம் தேவைகளான டயர், டியூப், பல்புகள் போன்ற உதிரிபாகங்களைகூட வாங்க முடியாமல் தள்ளாடி வரும் நிலையில் டீசல் விலை உயர்வு கழகங்களின் குரல்வளையை நெரிப்பதாகும்.
நான்கு வருட காலமாக தொழிலாளிகளுக்கு கொடுக்க வேண்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்பளத்தை கொடுக்காமல் {விடுப்பை தொழிலாளியின் கணக்கிலிருந்து கழித்துக்கொண்ட பிறகும்} கழகங்கள் தொழிலாளிகளை வஞ்சிக்கின்றன.


சென்ற ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து உயர்ந்த பஞ்சப்படி நிலுவைத்தொகையை ஜுலை,ஆகஸ்ட்டு ஆகிய இரண்டு மாதங்களுக்கு இன்று வரை கொடுக்கவில்லை.

ஆக மைய அரசின் இந்த வஞ்சனையான டீசல் விலை உயர்வு தனியார் முதலாளிகள் கொள்ளை லாபம் பெறவும் போக்குவரத்துகழகங்கள் நசிந்து போகவும் வழிவகுக்கும்.

Monday, 31 December 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Saturday, 15 December 2012

எச்சரிக்கை?



ரேசன் முறையை ஒழிக்க மன்மோகன் சிங் தீவிரம்

 மானியத்துடன் கூடிய பொருள்விநியோகத்திற்குப் பதிலாக நேரடிப் பணப் பட்டுவாடா என்ற பெயரில் நாட்டின் பொதுவிநியோக முறையை ஒழித்துக்கட்ட பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக களமிறங்கியிருக்கிறார். ‘போர்க்கால அடிப் படையில்’ பணப்பட்டு வாடா திட்டத்தை அமல் படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதகதியில் செய்து முடிக்குமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் பிர தமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மன்மோகன் சிங் அரசு, சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் திட்டங்களை வரிசையாக அறிவித்து வருகிறது. அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்வு, அந்நிய மூலதனத்திற்கு தாராளமாக நாட்டின் கதவுகள் திறப்பு, அனைத்தும் தனியார்மயம் என நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டுவரும் மன்மோகன் அரசு, பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டும் நோக்கத்தோடு நேரடிப் பணப்பட்டுவாடா திட்டத்தை அறிவித்துள்ளது.நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு, ரேசன் பொருட் கள் உட்பட பல்வேறு திட்டங்களில் ஏழை, எளிய மக்களுக்கு அரசு மானியம் வழங்கி வருவதுதான் மிகப்பெரும் தடைக்கல்லாக இருக்கிறது என மன்மோகன் அரசு பகிரங்கமாகக் கூறியுள்ளது.

இந்த மானியங்கள் அனைத்தையும் படிப்படியாகவும் நிரந்தரமாகவும் ஒழித்துக் கட்டுவது என்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதனைச் செயல்படுத்தும் மிகப்பெரிய திட்டமே பணப்பட்டுவாடா திட்டம்.நாடு முழுவதும் ரேசன் கடைகளில் அளிக்கப்பட்டு வரும் உணவு தானியங்கள், எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், அரசின் மானியத்துடன் குறைந்தவிலையில் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடை களே நாட்டின் கோடானு கோடி மக்களின் வயிறுகளைக் காயவிடாமல் காப்பாற்றி வருகின்றன. இந்நிலையில் இப்பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நேரடியாக பணமாகவே கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் அரசே செலுத்திவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் அமலானவுடன் ரேசன் கடைகளில் மானியத்துடன் கூடிய பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டு விடும். எனவே வெறும் மானியத்தொகையை மட்டும் கொண்டு வெளிச்சந்தையில் மிகக்கடுமையான விலையில் விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலைமை ஏற்படும். இது நாடு முழுவதும் பசி, பட்டினியை அதிகரிக்கும். எனவே இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் உறுதிபட வலியுறுத்தி வருகின்றன. ஏழை, எளிய மக்களின் உணவுப்பாதுகாப்பை அழிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து போராட்ட வியூகங்களையும் வகுத்துள்ளன.

பிரதமர் தீவிரம்

ஆனால், அரசுத்தரப்பில் இத்திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார். அரசுத்திட்டங்களைச் செயல்படுத்த முன்னெப்போதும் செலுத்தப்படாத அளவிற்கு இத்திட்டத்திற்கு மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தை ஆதார் அடையாள எண்களின் அடிப்படையிலேயே செயல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதால், அதற்கான பணிகளை விரைவு படுத்துமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.முதல்கட்டமாக 8 மாநிலங்களில் 51 மாவட்டங்களில் இத்திட்டம் அமலாகிறது. தற்போது தேர்தல் நடைபெற்றுள்ள குஜராத் மற்றும்இமாச்சலப்பிரதேசம் ஆகிய இருமாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்கள் தவிர இதர 43 மாவட்டங்களில் ஆதார் அடையாள அட்டை வழங்குதல், ஆதார் எண்களை ஒதுக்கீடு செய்வது போன்ற பணிகளை உடனடியாக முடிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பயிற்சி முகாமும் நடத்தப்படுகிறது. ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு விபரங்கள் போன்றவற்றுடன் கூடிய தனிப்படிவத்தை தயார் செய்வதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் நிதி சேவைத்துறை பொறுப்பேற்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக      தில்லியில் வெள்ளியன்று, பிரதமர் அமைத்துள்ள சிறப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்தியஅரசு மூலம் செயல் படுத்தப்படும் 34 திட்டங்களில் நேரடிப்பணப்பட்டு வாடா முறை ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் திட்டங்களுக்கு இப்போது நடை முறையில் இருப்பது போல் மாநில அரசுகள் வாயிலாக நிதிப்பரிமாற்றம் செய்யப்படும். ஆனால் மத்தியஅரசு நேரடியாக செயல்படுத்தும் திட்டங்களில் நேரடியாகவே பணம் பட்டுவாடா செய்யப்படும். இத்திட்டத்தின் கணக்குகள் அனைத்தையும் மத்திய நிதியமைச்சகத்தின் செலவுத்துறை பராமரிக்க வேண்டும் என்றும் இப்போது நிலுவையிலுள்ள சட்டங்க ளில் இதற்குத் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பயனாளி 18 வயதிற்கு கீழ் உள்ளவராக இருந்தால் அவரது தாயின் ஆதார் எண் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கலாம்; ஆதார் எண்கள் வழங்குவதற்கு வங்கிகளே பதிவாளர் களாக செயல்படும் என்றும் மேற்கண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தீக்கதிர் செய்தி.

Wednesday, 21 November 2012

சனநாயகமா?


தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பான்டீ சத்தா என்கிற குரு பிரீத் சிங் சத்தாவும் அவரது தம்பி ஹர்தீப் சத்தாவும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு இறந்தார்கள். இரண்டு சமூகவிரோதிகள் மடிந்ததை, இந்தியாவின் அத்தனை தேசிய நாளிதழ்களிலும் முதல் பக்கச் செய்தியாக, சில பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்படும் அளவுக்கு அந்தக் கொலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
பான்டீ சத்தாவினுடைய வர்த்தகக் குழுமத்தின் ஆண்டுக்கான பற்றுவரவு 6,000 கோடி ரூபாயிலிருந்து 20,000 கோடி ரூபாய் வரை. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரேந்திர சிங்,

Tuesday, 6 November 2012

மதுரை - சென்னைக்கு ரூ.1,200 கட்டணம்


தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆம்னி பஸ்கள் போர்வையில், சுற்றுலா பஸ்கள், விமான பயணத்துக்கு இணையான கட்டணத்தை, சுற்றுலா பஸ்கள், விமான பயணத் துக்கு இணையான கட்டணத்தை வசூலிக்கத் துவங்கி விட்டன. இவற்றில், டோக்கன் முறையில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

முன்பதிவு:தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் இயக்கப்படும் அனைத்து வழக்கமான பஸ்கள், ரயில்களில், டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது; அதன் பின் அறிவிக்கப்பட்ட, சிறப்பு

இணையம்